Last Updated : 17 Apr, 2019 08:40 PM

 

Published : 17 Apr 2019 08:40 PM
Last Updated : 17 Apr 2019 08:40 PM

வேலூர் தேர்தல் ரத்து: ‘எல்லாம் அண்ணன் ராசி’- எஸ்.வி.சேகர் கிண்டல்

வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக வைகோவை கிண்டல் செய்துள்ளார் எஸ்.வி.சேகர்

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அமமுக சார்பில் பாண்டுரங்கன், நாம் தமிழர் கட்சி சார்பில்  தீபலட்சுமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் ரொக்கமும், அதற்கு இரண்டு நாள் கழித்து தேதி துரைமுருகனுக்கு நெருங்கி உறவினரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, சிமெண்ட் குடோனில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது தொடர்பாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், உறவினர் பூஞ்சாலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

நேற்றிரவு (ஏப்ரல் 16) வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை வைகோவுடன் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “மேட்ச் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடியே முதல் பால் நோ பால்.  எல்லாம் அண்ணன் ராசி.” என்று குறிப்பிட்டு துரைமுருகனுக்கு மாலை அணிவிக்கும் வைகோ புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் எஸ்.வி.சேகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x