Published : 11 Apr 2019 07:45 AM
Last Updated : 11 Apr 2019 07:45 AM

அரசு மனநல மருத்துவமனையில் முதல் முறையாக வாக்குப்பதிவு மையம்: குணமடைந்த 192 பேருக்கு வாக்களிக்க பயிற்சி

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்து வமனையில் முதல்முறையாக வாக்குப்பதிவு மையம் அமைக் கப்படுகிறது. சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த 192 பேர் வக்களிக்க உள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் 960பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தவர்கள், வீடுகளுக்கு செல்கின்றனர். உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்கு மருத்துவமனை யிலேயே தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுபோல் உறவினர்களால் கைவிடப்பட்ட குணமடைந் தவர்கள் 114 ஆண்கள், 78 பெண் கள் என மொத்தம் 192 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.

இந்த 192 பேரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர் தலில் வாக்களிக்கும் உரிமையை மருத்துவமனை இயக்குநர் பூர்ண சந்திரிகா பெற்றுத் தந்துள்ளார். இயக்குநர் பூர்ணா சந்திரிகா எடுத்த முயற்சியால், மருத்துவமனையில் வாக்குப்பதிவு மையம் அமைக்கதேர்தல் அதிகாரிகள் முடிவு செய் துள்ளனர். நேற்று மருத்துவமனைக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்க ளிப்பது எப்படி என்பது குறித்த பயிற்சியை அளித்தனர்.

 இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் பூர்ண சந்திரிகாவிடம் கேட்டபோது, “இந்த அரசு மனநல மருத்துவமனையில் முதல்முறையாக வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட உள்ளது. குணமடைந்த 192 பேர் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்க ளிக்க உள்ளனர். வாக்களிப்பது குறித்த முன்னோட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இன்று வாக்களிப் பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நடைபெற உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x