Published : 04 Apr 2019 12:01 PM
Last Updated : 04 Apr 2019 12:01 PM
சிதம்பரம் மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் திமுக கூட்ட ணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் நேற்று காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காட்டுமன்னார்கோயில் வீரநா ராயண பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பின் அங்கிருந்து திறந்த நான்கு சக்கர வாகனத்தில் வாக்கு சேக ரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
குப்பங்குழி, ராஜசூடாமணி, அழிஞ்சிமங்கலம், கால்நாட்டாம் புலியூர், முட்டம், மேவூர், ஆயங்குடி, ஆதனூர், ரெட்டியூர், ஓமாம்புலியூர், குணவாசல் உள்ளிட்ட 25 கிராமங்களில் வாக்கு சேகரித்தார். திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி, நகர செய லாளர் கணேசமூர்த்தி, டெல்டா பாசன விவசாய கூட்டமைப்பு தலை வர் இளங்கீரன், தவாக மாநில நிர்வாகி கண்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரகாஷ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT