Published : 11 Apr 2019 01:29 PM
Last Updated : 11 Apr 2019 01:29 PM

என் சின்னத்தைத் தவிர மற்ற அனைத்து சின்னங்களையும் பளிச் என்று வைத்துள்ளனர்: சீமான் ஆவேசம்

வாக்கு இயந்திரத்தில் என் சின்னத்தைத் தவிர மற்ற அனைத்து சின்னங்களையும் தேர்தல் ஆணையம் ‘பளிச்’ என்று வைத்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் சார்பில் மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுபாஷினியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''வாக்கு இயந்திரத்தில் என் சின்னத்தைத் தவிர மற்ற அனைத்து சின்னங்களையும் தேர்தல் ஆணையம் ‘பளிச்’ என்று வைத்துள்ளது. நான் ஒரு சாதாரண ஆள். என்னைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?

எப்படி விவசாயத்தையும் விவசாயிகளையும் மறைத்தார்களோ அதே போல என் சின்னத்தையும் மறைக்கிறார்கள். சென்ற முறை கிடைத்த மெழுகுவர்த்தி சின்னத்திலும் இவ்வாறே செய்தார்கள்.

காளை மாடு சின்னம் கேட்டேன். அது உயிருள்ள பொருள், தரமுடியாது என்றார்கள். அதற்குப் பதில் விவசாயி சின்னம் ஒதுக்கியுள்ளனர். அதற்கு என்ன அர்த்தம்? விவசாயி உயிருடன் இல்லை என்று அர்த்தம்.

எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என்று திமுகவினர் சொல்கிறார்கள். பாஜகவை இங்கே அழைத்து வந்தவர்களே அவர்கள்தான்''.

இவ்வாறு சீமான் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x