Last Updated : 26 Apr, 2019 01:44 PM

 

Published : 26 Apr 2019 01:44 PM
Last Updated : 26 Apr 2019 01:44 PM

ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்; ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது: செவிலியரிடம் விசாரணை- 4,500 பிறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மை குறித்தும் ஆய்வு

குழந்தை விற்பனை விவகாரத்தில் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் உதவியாளர், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தனியார் மருத்துவமனை செவிலியர் ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத் தைச் சேர்ந்தவர் அமுதா என்கிற அமுதவள்ளி (50). இவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலி யர் உதவியாளராக பணிபுரிந்து கடந்த 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது கணவர் ரவிச்சந்திரன் (55), ராசிபுரத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் குழந்தைகளை லட்சக்கணக்கில் விலை பேசி விற்பனை செய்வது தொடர்பாக தருமபுரியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவருடன் அமுதவள்ளி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

7 குழந்தைகள் விற்பனை

இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அருளரசு உத்தரவின்பேரில், டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில், செவிலியர் உதவியாளர், அவரது கணவரை ராசிபுரம் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் ஓமலூர், மேட்டூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து 7 குழந்தைகளை விற் பனை செய்ததாக அமுதவள்ளி வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

அமுதவள்ளி அளித்த தகவலின் பேரில் கொல்லிமலையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முரு கேசன், ஈரோடு தனியார் மருத்துவ மனையைச் சேர்ந்த பர்வீன் என்ற செவிலியர் ஆகியோரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். குழந்தைகள் விற்பனையில் இருவரும் அமுதவள்ளிக்கு உடந் தையாக இருந்ததாக விசாரணை யில் தெரியவந்துள்ளது. இந்நிலை யில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீ ஸார் நேற்று கைது செய்தனர்.

இடைத்தரகர்கள்

மேலும், அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரனின் செல்போ னில் உள்ள எண்களை கைப்பற்றி, அதில் குழந்தை விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் யாரேனும் உள்ளனரா என்ற கோணத்திலும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தை பெற்றுத்தர பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும், பெண்களின் கருமுட்டையை விற்பனை செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

4,500 பிறப்பு சான்றிதழ்

இதனிடையே கடந்த 2 ஆண்டு களில் ராசிபுரம் நகராட்சியில் வழங் கப்பட்ட 4,500 பிறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரமேஷ் குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் பிறப்பு சான்றி தழின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறியதாவது:

விற்கப்படும் குழந்தைகளுக்கு ராசிபுரம் நகராட்சியில் பிறப்பு சான்றிதழ் பெற்றுத் தருவதாக அமுதவள்ளி பேசிய ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கடந்த 2 ஆண்டுகளில் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

எந்த தனியார் மருத்துவ மனையில் பிரசவம் நடந்திருந் தாலும் சுகாதாரத் துறையில் பதிவு செய்திருந்தால் மட்டுமே பிறப்பு சான்றிதழ் பெற முடியும். சான்றிதழ் பெற குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இல்லையெனில் கோட்டாட்சியரிடம் மனுசெய்து, அவரது விசாரணையின் அடிப் படையில் பிறப்பு சான்றிதழ் வழங் கப்படும். குழந்தைகள் தத்தெடுக் கும்முறை குறித்து சமூக நலத் துறை மூலம் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

குழந்தை விற்பனை விவகாரத்தில் அமுதவள்ளி உட்பட 4 பேர் தவிர வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இதுவரை எத்தனை குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன? குழந்தைகளை விற்றவர்கள், வாங்கியவர்கள் யார் என்பது குறித்து தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொட்டில் குழந்தை திட்டம்

ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பு செய்ய தொட்டில் குழந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இதுவரை குழந்தைகள் யாரும் தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் ஒப்படைக்கவில்லை என சமூக நலத்துறையினர் தெரிவித்தனர்.

ரூ.6 லட்சம் வரை குழந்தை விற்பனை

ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளையும் வாங்கி விற்பனை செய்துள்ளார். குழந்தைகளை ரூ.6 லட்சம் வரை விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்கு இடைத்தரகர்களும் சிலர் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொல்லிமலை போன்ற சிறிய கிராமங்களில் விவரம் அறியாத ஏழ்மை நிலையில் உள்ளவர்களை இடைத்தரகர்கள் மூலம் அணுகும் அமுதவள்ளி, அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x