Published : 07 Apr 2019 06:17 PM
Last Updated : 07 Apr 2019 06:17 PM
மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் சீமான் போட்டியிடாமல், 40 தொகுதிகளுக்கும் தமிழர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார். அவர்களுக்காக தமிழகம் முழுவதும் சென்று சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தூத்துக்குடியில் நாம் தமிழர் சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் என்னும் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார் சீமான்.
அப்போது பேசிய அவர், ''தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழன் கண்ணீரில் ஒருபோதும் மலராது. குளத்தில் வேண்டுமானால் மலரலாம்; தமிழன் நிலத்தில் தாமரை ஒருபோதும் மலராது. என் அம்மா சொல்வார். நம் தமிழர்கள் உடம்பில் படர்தாமரை வேண்டுமானால் மலரும்; பாரதிய ஜனதா தாமரை மலராது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT