Published : 16 Apr 2019 07:24 AM
Last Updated : 16 Apr 2019 07:24 AM

தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து எம்எல்ஏ விடுதியில் வருமானவரித் துறை சோதனை

சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத் தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதி யில் வருமானவரித் துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் வருகிற 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சியினரின் பணப்பட்டுவாடா வைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கடந்த சில வாரங்களாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானவரித் துறை யினரும் ஆங்காங்கே திடீர் சோத னைகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத் தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில், வாக்காளர்களுக்கு விநியோகிப் பதற்காக பணம் பதுக்கி வைத்துள்ள தாக தேர்தல் பறக்கும் படையின ருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலை வருமானவரித் துறையினருக்கும் தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து எம்எல்ஏக் கள் விடுதிக்குச் சென்ற தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எம்எல்ஏ விடுதியின் சி பிளாக் பகுதியில் 10-வது மாடியில் உள்ள தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அறை உட்பட பல்வேறு அறைகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இரவு 10 மணி முதல் 12.30 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. இரண்டரை மணி நேர சோதனைக்கு பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அங் கிருந்து வெளியேறினர். இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. திடீர் சோதனையால் எம்எல்ஏக்கள் விடுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அரசு கட்டிட ஒப்பந்ததாரர் பி.எஸ்.கே.பெரியசாமி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வரு கின்றனர். அதன் தொடர்ச்சியா கவே இந்த சோதனை நடைபெற்ற தாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x