Published : 02 Apr 2019 05:43 PM
Last Updated : 02 Apr 2019 05:43 PM
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக ஓபிஎஸ் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பிரச்சாரம் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளும் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் போட்டியில் உள்ளது. அமமுக சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் களத்தில் உள்ளார்.
வலிமையான மும்முனைப் போட்டியால் தேனி தொகுதியில் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இதனையடுத்து தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக, அவரின் தாயும் ஓபிஎஸ் மனைவியுமான விஜயலட்சுமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதேபோல ஓபிஎஸ் குடும்பத்தினர் கம்பத்தின் முக்கிய வீதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT