Published : 01 Apr 2019 10:09 AM
Last Updated : 01 Apr 2019 10:09 AM
அந்தமானில் மேற்கு வங்கத்து மக்களின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதை மனதில் வைத்து அங்கே இந்த முறை திரிணமூல் கட்சி வேட்பாளராக அயான் மோண்டல் என்பவரை நிறுத்துகிறார் மம்தா.
இங்கே காங்கிரஸ் வேட்பாளராகக் களம் கண்டு எட்டு முறை வென்ற மனோரஞ்சன் பக்தாவின் பேரன் தான் இந்த அயான். பாஜகவின் சிட்டிங் எம்பியான விஷ்ணு படா ராயை எதிர்த்துக் களம் காணுகிறார் அயான்.
கடந்த முறை சுமார் ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில தான் ராய் இங்கு வென்றார். இம்முறை இவரை வீழ்த்துவதற்கு அந்தமான் தமிழர்களின் வாக்குகளைக் கூடுதலாக ஈர்த்தாக வேண்டும்.
அதற்காகத்தான் கமலை வரவைத்துப் பேசினாராம் மம்தா. அவரது கோரிக்கையை ஏற்று திரிணமூல் வேட்பாளருக்காக கமல் அந்தமானில் பிரச்சாரம் செய்வார் என்கிறார்கள்.
அதற்குக் கைமாறாக, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் ஓரிரு கூட்டங்களில் மம்தா முழங்கினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT