Published : 23 Sep 2014 12:30 PM
Last Updated : 23 Sep 2014 12:30 PM

கள் போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு: தமிழ்நாடு கள் இயக்கம் சவால்

கள்ளை போதைப் பொருள் என நிரூபித்தால், ரூ.10 கோடி பரிசு வழங்குவதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சவால் விடுத்துள்ளது.

தமிழ்நாடு கள் இயக்க அமைப்பின் ஆலோசனைக் கூட்டம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.மாரப்பன் தலைமையில் கரூரில் நேற்று நடந்தது.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்ல சாமி முன்னிலை வகித்தார். பின்னர், கள் இயக்க ஒருங்கி ணைப்பாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியது: கேரள அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முடிவெடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கில், கள்ளுக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுவிலக்கு மற்றும் மதுக் கொள்கையை ஆய்வு செய் வதற்காக கேரள அரசால் நியமிக் கப்பட்ட ஏ.பி.உதயபானு குழு, கள் உற்பத்தியையும், நுகர்வையும் அதிகரிக்க வேண்டும்.

இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது உற்பத்தியையும், நுகர் வையும் குறைக்க வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரை அளித் துள்ளது. இதை மறைத்து, உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றுள்ளனர்.

கள்ளை போதைப் பொருள் என நிரூபித்தால், ரூ.10 கோடி பரிசு வழங்குகிறோம். இந்த சவாலை ஏற்குமாறு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றார் நல்லசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x