Published : 21 Apr 2019 12:00 AM
Last Updated : 21 Apr 2019 12:00 AM

மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம்: குளித்தலை பேரவை தொகுதி முதலிடம்; 3-ம் இடத்தையும் கரூர் மாவட்ட தொகுதியே பிடித்தது

தமிழக மக்களவைத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகள் பதிவான முதல் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகள் முதல் மற்றும் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளன.

தமிழகத்தில் வேலூர் தொகுதி நீங்கலாக 38 மக்களவைத் தொகுதிகளில் கடந்த ஏப்.18-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 71.90 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக தருமபுரியில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அதிக சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள முதல் 3 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 தொகுதிகள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும். கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி) ஆகிய 3 தொகுதிகள் கரூர் மக்களவைத் தொகுதியிலும், குளித்தலை தொகுதி பெரம்பலூர் மக்களவைத் தொகுதியிலும் வருகின்றன.

85.77 சதவீதம் பதிவுதற்போது நடைபெற்ற தேர்தலில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் 85.77 சதவீதம் வாக்குகள் பதிவாகிதமிழக அளவில் வாக்குப்பதிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதேபோல, கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் 84.21 சதவீத வாக்குகள் பதிவாகி தமிழக அளவில் 3-ம் இடத்தைப் பெற்றுள்ளது. 2-ம் இடம்இந்த வரிசையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி 85.63 சதவீத வாக்குப்பதிவுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழக அளவில் அதிக வாக்குகள் பதிவான முதல் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 தொகுதிகள் இடம் பெற்றுள்ள நிலையில், கரூர் மக்களவைத் தொகுதி 79.11 சதவீத வாக்குப்பதிவுடன் மக்களவைத் தொகுதிகளில் 3-ம் இடத்தை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x