Published : 20 Sep 2014 11:18 AM
Last Updated : 20 Sep 2014 11:18 AM

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரிக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஜாமீன் நிபந் தனையை தளர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருமங்கலம் சிவரக்கோட்டை யில் தயா பொறியியல் கல்லூரிக் காக விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், தினமும் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு ஆய்வாளர் முன் ஆஜராகி கையெ ழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மு.க. அழகிரிக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.

இதையடுத்து, அழகிரி மதுரை நீதித் துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். பின்னர், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு ஆய்வாளர் முன் தினமும் காலையில் ஆஜராகி கையெழுத் திட்டு வந்தார்.

இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி அழகிரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு அழகிரியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்திய நீதிபதி, தேவைப்படும்போது விசாரணைக்கு அழகிரி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x