Published : 13 Apr 2019 03:35 PM
Last Updated : 13 Apr 2019 03:35 PM
ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஆதரவாக நரேந்திர மோடி செயல்பட்டார் என்று காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார். தொகுதி முழுக்க சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், பிரதமர் மோடியைக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து மேலும் பேசிய வசந்தகுமார், ''ரஃபேல் விமானம் வாங்குவதாகச் சொன்ன உடனேயே, மோடி விமான நிறுவனத்துடன் பேசி அனில் அம்பானியை முதலிலேயே அழைத்துச் சென்றுவிட்டார். அதன்பிறகு இந்திய ராணுவத்துக்குத் தளவாடங்கள் வாங்குகிற பொறுப்பையும் அவரின் அமைச்சரவையிடம் கொடுத்துவிட்டார். யாருக்கு ஆர்டர் கொடுக்கவேண்டும் என்று ஏற்கெனவே மோடி பேசிவிட்டார். எனவேதான் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இதை 'தி இந்து' நாளிதழ் (ஆங்கிலம்) தெளிவாக விளக்கியிருந்தது. உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றவுடன் மோடி தப்பவே முடியாது. நிச்சயமாக அவருக்குத் தண்டனை உண்டு. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மோடி தண்டனை அனுபவிக்க வேண்டும்'' என்றார் வசந்தகுமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT