Published : 18 Apr 2019 09:45 AM
Last Updated : 18 Apr 2019 09:45 AM

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி வாக்களிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி ஆகியோர் வாக்களித்தனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் காலை தொடங்கியே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சென்னை தெற்கு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

 

உடல் நலிந்த காரணத்தால் அவர் சர்க்கர நாற்காலியில் அமர்ந்து வந்து வாக்களித்தார். மூக்கில் ட்யூபுடன் மிகவும் நலிந்த தோற்றத்தில் அவர் காணப்பட்டார்.

அதேபோல் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் மிகுந்த அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி வேட்பாளர்களைக் குறிவைத்து ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன. பாஜக அதிமுகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது என்றார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x