Published : 14 Apr 2019 01:51 PM
Last Updated : 14 Apr 2019 01:51 PM
திமுக கூட்டணி நரகாசூரக் கூட்டணி என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று (ஏப்.14) கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், சென்னை துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"இந்த தமிழ்ப் புத்தாண்டில் ஒவ்வொரு தமிழனுடைய நெஞ்சினிலும், தமிழினத்தை அழித்த துரோகிகள், தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம் மத்திய அரசுக்கு தாரை வார்த்த நரகாசூரக் கூட்டணியை ஒழிப்பது தான், கடமையாக நிச்சயமாக இருக்கும். அதையே இன்றைக்கு தமிழ்ப் புத்தாண்டில் ஒவ்வொரு தமிழனும் உணர்வார்கள். அதற்கேற்ற வகையில் நரகாசூரர்களும், அரக்கர்களும், தலைதூக்கா வண்ணம் வருங்காலம் நிச்சயம் இருக்கும்".
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT