திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் ரெய்டு

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் ரெய்டு
Updated on
1 min read

திமுக தூத்துக்குடி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும்படை ரெய்டு நடத்தி வருகிறது.

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இவர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துவரும் சூழலில் திமுக முக்கிய நிர்வாகிகளை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் ரெய்டு நடந்தது. இன்றும் அவரது கல்லூரியில் ரெய்டு நடந்தது.

திமுக இதுபோன்ற சலசலப்புகளுக்கு அஞ்சாது என ஸ்டாலின் பேசியிருந்த நிலையில் இன்று திமுகவின் திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை இல்லத்தில் தேர்தல் பறக்கும்படையினர் மாலை 6-30 மணிமுதல் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரின் அனிதா  ராதாகிருஷ்ணன் சொந்த ஊரான தண்டபத்தில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் மாலை 6-30 மணி முதல் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in