Published : 06 Sep 2014 09:57 AM
Last Updated : 06 Sep 2014 09:57 AM

அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் சிறையில் அடைப்பு

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நடிகர் அஜீத் வீடு திருவான்மியூரில் உள்ளது. கடந்த மாதம் 29-ம் தேதி நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையடுத்து 108 சேவை மைய அதிகாரிகள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் அஜீத் வீட்டில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து 108 சேவை மையத்தை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் போனில் மிரட்டல் விடுத்த மதுரை குன்னத்தூர் நியூ காலனியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவரை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், தான் மிரட்டல் விடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சந்தோஷை கைது செய்த போலீஸார், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x