Published : 30 Sep 2014 11:10 AM
Last Updated : 30 Sep 2014 11:10 AM

பண்டிகைக் கால சிறப்பு ரயில் இன்று முன்பதிவு

விஜயதசமி விழாவை முன்னிட்டு கச்சேகவுடா சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்றுமுதல் (30-9-14) தொடங்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக கச்சேகவுடா சென்னை சென்ட்ரல் (எண்: 02760) சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் கச்சேகவுடாவில் இருந்து அக்டோபர் 5-ம் தேதி இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னை சென்ட்ரல் கச்சேகவுடா சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 02759) சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 6-ம் தேதி பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 3.40 மணிக்கு கச்சேகவுடா போய்ச்சேரும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்றுமுதல் (செப். 30) தொடங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x