Published : 29 Sep 2014 12:15 PM
Last Updated : 29 Sep 2014 12:15 PM

தீர்ப்புக்கு எதிர்ப்பு: மதுரையில் இன்று திரைப்பட காட்சிகள் ரத்து

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைக் கண்டித்து மதுரையில் இன்று ஒருநாள் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் இதனை அறிவித்துள்ளனர்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அறிவித்தார்.

அவர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 10 கோடி அபராதமும் விதித்தார். இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x