Published : 03 Mar 2019 04:43 PM
Last Updated : 03 Mar 2019 04:43 PM
முதல்வர் பழனிசாமியைக் குற்றம் சாட்டும் தகுதி ஸ்டாலினுக்கு உள்ளது. டிடிவி தினகரனுக்கு இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சிவகாசியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எடப்பாடி பழனிசாமி 1989-ல் சேவல் சின்னம் சார்பில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர். அவர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி. முதல்வரைக் குற்றம் சாட்டும் தகுதி டிடிவி தினகரனுக்கு இல்லை.
1989-ல் தினகரன் எங்கு இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார்? எந்தக் கட்சியில் இருந்தார், அப்போது அவரின் பொருளாதார நிலை என்ன, இப்போது அவரின் பொருளாதார நிலை என்ன?
எடப்பாடி பழனிசாமியைக் குற்றம் சாட்டும் தகுதி ஸ்டாலினுக்கு உள்ளது. அவர் 1989-ல் எம்.எல்.ஏ. அதேபோல் ஸ்டாலினைக் குற்றம் சாட்டும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. இருவருக்குள்ளும் ஆரோக்கியமான அரசியல் போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு இடையில் நான்தான் நான்தான் என்று டிடிவி ஏன் சம்பந்தமில்லாமல் வருகிறார்?'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT