Published : 30 Mar 2019 02:12 PM
Last Updated : 30 Mar 2019 02:12 PM

மாற்றத்தை ஏற்படுத்தும் முகவர்கள் நாம்: யோகேந்திர யாதவுக்கு கமல்ஹாசன் அழைப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை ஒட்டி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினரும் அரசியல் நோக்கருமான யோகேந்திர யாதவை பிரச்சாரத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் கமல்ஹாசன்.

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இதனையொட்டி யோகேந்திர யாதவ்  தனது ட்விட்டரில், "கமல்ஹாசன் தலைமையில் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முழுவீச்சில் போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கீறது.

தமிழகத்துக்கு தேவையான மாற்று அரசியலுக்கு இது நம்பிக்கையளிக்கும் பெரிய முன்னெடுப்பு. மக்கள் நீதி மய்யத்துக்கும் தமிழக மக்களுக்கும் நல்வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள கமல்ஹாசன், "நன்றி யோகேந்திர யாதவ். மக்கள் நீதி மய்யம் என்பது பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தமிழக அரசியலில் மாற்றம் கொண்டுவர கையிலெடுக்கப்பட்ட ஒரு நேர்மையான முயற்சி.

மக்கள் நீதி மய்யம் சார்பில் உங்களை எங்களுடன் பிரச்சாரத்தில் இணையுமாறு அழைக்கிறோம். கோவை, பொள்ளாச்சி பிரச்சாரங்களில் கலந்து கொள்ளுங்கள். இந்த பிரச்சார மேடையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

நம்மைப் போன்றோர்தான் நேர்மறை மாற்றத்தைக் கொண்டுவரும் முகவர்களாக இருக்க முடியும்" என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x