Published : 20 Mar 2019 06:03 PM
Last Updated : 20 Mar 2019 06:03 PM

கருணாநிதியின் பிறந்த நாளில் மோடியின் ஆட்சி முடியும்: ஸ்டாலின் சூளுரை

கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி மோடியின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின்,  ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தனது தேர்தல் பிரச்சாரத்தை கருணாநிதி பிறந்த திருவாரூரில் இன்று தொடங்கினார்.

அப்போது பேசிய அவர், ''மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியின் கெடு ஜூன் 3-ம் தேதி முடிகிறது. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளில்தான் அந்த ஆட்சி முடிவடைகிறது.  இது எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. 18 தொகுதிகளின் தேர்வு முடிவும் அதே சமயத்தில்தான் வரப்போகிறது.

அப்படி வரும் நேரத்தில் மோடியின் ஆட்சி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியும் அகற்றப்படும்.

ஊழலை ஒழிப்பேன் என்று சொன்ன மோடி, ஊழலில் திளைத்து ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்'' என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x