Published : 20 Mar 2019 09:43 PM
Last Updated : 20 Mar 2019 09:43 PM

திருமாவளனுக்கு பானை சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திமுக தரப்பில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கும்போதே உதயசூரியன் சின்னத்தில் நின்றால் நன்றாக இருக்கும் என கேட்டதாகவும் அதை பரிசீலிப்பாதாக திருமாவளவன் கூறியதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனிச்சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

தங்களது சின்னமான மோதிரம் சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விண்ணப்பித்தது. ஆனால் தமிழ்நாடு இளைஞர் கட்சி எனும் புதியகட்சி 39 தொகுதிகளில் நிற்பதற்காக மோதிரம் சின்னத்தைக்கேட்க, அதிக இடங்களில் நிற்க கேட்ட கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது.

பின்னர், வைரம் சின்னத்தை கேட்டபோதும், அதுவும் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மூன்றாவதாக பலாப்பழ சின்னம் கேட்டு அதுவம் கிடைக்கவில்லை

இந்தநிலையில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x