Published : 11 Mar 2019 09:11 AM
Last Updated : 11 Mar 2019 09:11 AM

நாங்கள் கேட்காமலேயே எங்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவு கொடுப்பார்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை

நாங்கள் கேட்காமலேயே ரஜினி காந்த் எங்களுக்கு ஆதரவு கொடுப் பார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் நேற்று கூறியதாவது:

பொருத்தமான சின்னத்தை எங்களுக்கு வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி. ஏற்கெனவே நோட்டாவுக்கும் கீழே கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பாஜகவை தேடித்தான் பிடிக்க வேண்டும். அதற்கு எங்களுடைய டார்ச் பயன்படும். மக்களும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நோட்டாவுக்கு கீழே மிச்சம் இருப்பவர்களையும் வெளியேற்ற மக்கள் சிந்தனையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சின்னமாக நோட்டாவையே கொடுக்கலாம்.

நல்லவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று நாங்கள் கூறியபோதே முக்கால்வாசி பேருக்கு எங்கள் கூட்டணியில் இடம் இல்லை என்பது உறுதி யாகிவிட்டது. மக்களுடனான எங்கள் கூட்டணி மிகவும் பலமான கூட்டணி. மக்களின் ஆட்சி வரப் போகும் நேரத்தில் மக்கள் கூட்டணி அமைவதுதான் நியாயம்.

நிகழ்த்திக் காட்டக்கூடிய வாக்கு றுதிகளுடன் மட்டுமே தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் வெளியிடப்படும். மார்ச் 11 (நாளை) முதல் 15-ம் தேதி வரை நேர்காணல் நடக்கும். 40 தொகுதிகளிலும் டார்ச்லைட் ஒளி வீச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

7 பேர் விடுதலை விவ காரத்தில் சட்டத்தில் நாம் குறுக் கிட இயலாது. ஆனால், கருணை என்ற வாய்ப்பு இருக்கிறது. கருணையைக் காட்ட வேண்டியவர்கள் காட்ட வேண்டும். ஏழு பேர் மட்டுமின்றி, ஏழரை கோடி பேரின் விடுதலை பற்றியும் பேச வேண்டும்.

பூரண மதுவிலக்கு சாத்தி யமா என்பதற்கு உலக சரித் திரமே சான்றாக உள்ளது. ஒரே நாளில் பூரண மதுவிலக்கு கொண் டுவந்தால் இடையூறுகள்தான் அதிகரிக்கும். படிபடியாக என்பது தான் நடக்கக்கூடிய விஷயம். அதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

நான் போட்டியிடுவேன்

ரஜினியிடம் ஆதரவு கேட்பது இரு தரப்புக்கும் சங்கோஜத்தை ஏற்படுத்தும். கேட்காமல் கொடுப்பது பெரிய விஷயம். கிடைப்பதும் பெரிய விஷயம். அவர் ஆதரவு தருவார் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். 21 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது. இந்தத் தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன். எங்கே என்று பிறகு சொல்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x