Published : 11 Mar 2019 12:39 PM
Last Updated : 11 Mar 2019 12:39 PM

சாதி சங்கங்களை கவர அதிமுக புது உத்தி

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலில் ஆளும்கட்சி மீதான அதிருப்தி யைக் குறைக்கவும், பல்வேறு அமைப்பு, சாதியினரின் ஆதரவைப் பெறவும் அதிமுக புது உத்தியைக் கையாண்டு வருகிறது.

இதற்காக பெரும்பிடுகு முத்தரையர், இரட்டை மலை சீனிவாசன், வி.கே.பழனிசாமி கவுண்டர் ஆகிய தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும். ஒண்டிவீரன், சுந்தரலிங்கனார் ஆகிய தலைவர்களின் மணிமண்டபம் புனரமைக்கப்படும் என முதல்வர் கே. பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூட்டில் உயர்நீத்தவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்தார். அதேபோல் மற்ற சாதி சங்கங்களையும், அமைப்புகளையும் கவர அதிமுக புதிய உத்தியைக் கையாண்டு வருகிறது.

மாவட்ட வாரியாக ஏராளமான சாதி அமைப்புகளை அணுகி கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும், சாதித் தலைவர்களுக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்வதாகவும் ஆளும்கட்சியினர் வாக்குறுதி களை அளித்து வருகின்றனர். இதன் மூலம் அந்தந்த சாதிகளின் ஆதரவை அறுவடை செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது.

கருணாநிதியின் தலைமைப் பண்பில் ஸ்டாலினை பொருத்திப் பார்க்க முடியுமா? - தொல்.திருமாவளவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x