Published : 07 Mar 2019 12:06 PM
Last Updated : 07 Mar 2019 12:06 PM

துரைமுருகன் வெளியில் சொல்லியிருக்கக் கூடாது: தம்பிதுரை கருத்து

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக நிர்வாகிகள் பேச்சு நடத்திதை துரைமுருகன் வெளியில் சொன்னது தவறு, இதன் மூலம் திமுக எப்படிப்பட்ட கட்சி என்பது தெரியவந்துள்ளது, ஒரு கட்சிக் கூட்டணிக்குள் வந்தால்தான் வெற்றி என்ற நிலை அதிமுகவுக்கு இல்லை.

 

ஒரு கட்சி பல இடங்களில் பேசுவது வழக்கம், அதை அநாகரிகமாக துரைமுருகன் வெளிப்படுத்தினார். இந்த மாதிரியான திமுக நாட்டு மக்களுக்கு என்ன செய்யும், இந்தியாவை எப்படி காப்பாற்றும் தமிழகத்தை எப்படி காப்பாற்றும்? தமிழ் இனத்தை எப்படிக் காப்பாற்றும்? தமிழ் மொழியை எப்படிக் காப்பாற்றும்? என்பதை நீங்களே துரைமுருகன் பேச்சிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

தனித்துப் போட்டியிட்டே அதிமுக வெற்றிபெற்றுள்ளது, ஒரு கட்சி கூட்டணிக்குள் வந்தால்தான் அதிமுகவுக்கு  வெற்றி என்ற நிலை இல்லை.  விஜயகாந்த் கட்சியும் வரவேண்டும் என்றே விரும்புகிறோம்.

 

இவ்வாறு கூறினார் தம்பிதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x