Published : 17 Mar 2019 06:24 PM
Last Updated : 17 Mar 2019 06:24 PM
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் அதிமுகவுடன் கைகோர்த்துள்ளது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. இந்தக் கூட்டணியில் பாஜக இருப்பதால் த.மா.காவின் சில தரப்பில் அதிருப்தி நிலவுவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கூட்டணியில் அதிருப்தி தெரிவித்து மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் கே.கே.குருசாமி கட்சியிலிருந்து விலக முடிவெடுத்தார், இதனையடுத்து ஜி.கே.வாசன் அவரை கட்சியிலிருந்து நீக்கினார்.
இதனையடுத்து கே.கே.குருசாமி தன் ஆதரவாளர்கL 150 பேர்களுடன் சத்யமூர்த்தி பவன் வந்தார். அங்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT