Published : 13 Mar 2019 08:09 AM
Last Updated : 13 Mar 2019 08:09 AM

விருப்ப மனு அளித்தவர்களிடம் தேமுதிக இன்று நேர்காணல்

மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் தலைமையில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர், பாஜகவுக்கு 5 தொகுதிகள், தேமுதிகவுக்கு 4 தொகுதிகள், புதிய தமிழகத்துக்கு 1 தொகுதி, புதிய நீதிக் கட்சிக்கு 1 தொகுதி, என்.ஆர்.

காங்கிரஸுக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டது. தமிழகம் மற்றும்புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, மற்ற 21 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

நீண்ட இழுப்பறிக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தாலும், முன்கூட்டியே மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன. இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம், கட்சித் தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

விருப்ப மனு அளித்தவர்கள் நேர்காணலுக்கு வரும்போது கட்சி உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், தனித் தொகுதிக்கு ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகலை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று தேமுதிக தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x