Published : 11 Mar 2019 08:46 AM
Last Updated : 11 Mar 2019 08:46 AM

வரத்து குறைவால் கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு

கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதனால் அவற்றின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் நேற்று ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தக்காளி ரூ.15, கத்தரிக்காய், அவரைக்காய், பாகற்காய் தலா ரூ.35, வெண்டைக்காய், பச்சை மிளகாய் தலா ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.16, கேரட் ரூ.18, பீட்ரூட் ரூ.20 என விலை உயர்ந்துள்ளது.

மற்ற காய்கறிகளான பெரிய வெங்காயம் ரூ.11, சாம்பார் வெங்காயம் ரூ.30, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, புடலங்காய் தலா ரூ.15, முருங்கைக்காய் ரூ.25 என விற்கப்பட்டு வருகின்றன.

காய்கறி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் கூறும்போது“கடந்த 10 நாட்களாக பல ஊர்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. அதனால் செடிகளில் காய் பிடிப்பது குறைந்து, காய்கறி வரத்தும்குறைந்துள்ளது. அதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x