Published : 03 Sep 2014 12:00 AM
Last Updated : 03 Sep 2014 12:00 AM

துறைத் தேர்வு எழுத அரசு ஊழியர் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு தடவை (மே மற்றும் டிசம்பர்) நடத்தப்படும். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான 2-வது துறைத் தேர்வு டிசம்பர் 23-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலையில் 9 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கும் தேர்வு நடைபெறும்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் (www.tnpsc.gov.in) 1-ந் தேதி தொடங்கியது. இந்த மாதம் 31-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஹால் டிக்கெட்டுகளை டிசம்பர் 12 முதல் 31-ந் தேதி வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x