Published : 07 Mar 2019 12:40 PM
Last Updated : 07 Mar 2019 12:40 PM
திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் என, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக க.அன்பழகன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 11-3-2019 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என, க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT