Published : 11 Mar 2019 12:46 PM
Last Updated : 11 Mar 2019 12:46 PM
கன்னட நடிகரைத் தாக்கியதாக நடிகர் விமல் மீது சென்னை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, விருகம்பாக்கத்தில் தன் நண்பர்களுடன் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது, அதேவிடுதியில் கன்னட நடிகர் ஒருவர் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது ஏதோ விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றியுள்ளது.
இதனையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது, இதனையடுத்து விமல் உட்பட அவரது நண்பர்கள் சேர்ந்து கன்னட நடிகரைத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் போலீஸார் நேரடியாக வந்து விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது விடுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் 294-பி என்ற சட்டப்பிரிவின் கீழ் விமல் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமல் தரப்பிலிருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT