Last Updated : 28 Mar, 2019 11:00 AM

 

Published : 28 Mar 2019 11:00 AM
Last Updated : 28 Mar 2019 11:00 AM

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு தபால் வாக்குரிமை வழங்கப்படுமா?

நூறு சதவீத வாக்குப்பதிவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்ப டுத்த தேர்தல் ஆணையம் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல் துறை யினர் வெளியூர்களில் தேர்தல் பணியாற்ற வேண்டிய நிலை இருப்பதால், அவர்களுக்கு தபால் வாக்கு உரிமை நடைமுறையில் உள்ளது.

இதேபோல் தேர்தலின்போது வாக்குப் பதிவு செலுத்த முடி யாத நிலையில் இருக்கும் பொதுமக்களுக்கும் வாய்ப்பு அளித்தால்தான் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தமிழகம் முழு வதும் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக இருக்கும் ஏராள மானோர் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு உதவி யாக இருக்கும் குடும்பத்தினரும் வாக்களிக்கச் செல்ல முடிவ தில்லை.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் உள்நோயாளி களுக்கு தபால் வாக்கு முறையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் சையதுபாபு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். இது தொடர் பாக பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனாலும், அது தொடர்பாக நட வடிக்கை எடுக்கப் படவில்லை.

இதுகுறித்து சையதுபாபு கூறியதாவது: அரசு மருத்துவ மனைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு மக்களவைத் தொகுதிக்கு குறைந்தது 50 ஆயிரம் பேர் வரை வாக்களிக்க முடியாமல் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதைச் சுட்டிக் காட்டியே வழக்குத் தொடர் ந்தேன். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களது உதவி யாளர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x