Published : 24 Sep 2014 04:04 PM
Last Updated : 24 Sep 2014 04:04 PM

ஸ்குவாஷில் வெள்ளி வென்ற சவுரவ் கோஷலுக்கு ரூ.30 லட்சம் பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு

ஆசிய போட்டிகளில் ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் சவுரவ் கோஷலுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்குவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் நடந்து வரும் 17–வது ஆசிய விளையாட்டு ஆண்கள் ஒற்றையர் ஸ்குவாஷ் போட்டியில் சவுரவ் கோஷல் வெள்ளி பதக்கம் வென்றார். இந்த நிலையில் இது குறித்து அறிந்ததில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும், மேலும் அவரது வெற்றி தொடர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெரும் தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று 2011–ம் ஆண்டு தமது அரசு அறிவித்திததாகவும் அதன்படி, சவுரவ் கோஷலுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x