Last Updated : 14 Feb, 2019 09:07 PM

 

Published : 14 Feb 2019 09:07 PM
Last Updated : 14 Feb 2019 09:07 PM

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியுடன் களமிறங்கும் : ஈரோட்டில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உறுதி

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்கும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈரோட்டில் இன்று தெரிவித்தார்.

 

விரைவில் இதற்கான இந்தக் கூட்டணி அமையும் என்று தெரிவித்த அமித் ஷா 30 லோக்சபா தொகுதிகளிலும் பாஜக கூட்டணி அமைத்துப்  போட்டியிடும் என்றார்.

 

இன்று ஈரோட்டில் கைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா பேசிய போது இத்தகவலை வெளியிட்டார்.

 

“வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியுடன் சேர்ந்து 39 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என்றார்.

 

அ.இ.அ.தி.மு.க உதவி ஒருங்கிணைப்பாளரும் எம்.பியுமான ஆர். வைத்திலிங்கம் சமீபத்தில் அதிமுக கூட்டணிக்காக பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது என்று தெரிவித்ததையடுத்து தற்போது அமித் ஷா கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

 

பாஜக, பாமக, தேமுதிக கட்சிகளுடன் அதிமுக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வைத்திலிங்கம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x