Published : 09 Sep 2014 10:56 AM
Last Updated : 09 Sep 2014 10:56 AM
குற்ற வழக்கில் நீண்ட காலம் விசாரணைக் கைதியாக சிறையி லுள்ளோரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை, திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: உச்ச நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன் அளித்த தீர்ப்பில், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டாமென்று, பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தெரிவித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான விசாரணையை துரிதப்படுத் தவும், குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டுக் குள் வழக்கை முடிவுக்குக் கொண்டு வரவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, மத்திய சட்ட அமைச்சகம் கடந்த வாரம், டெல்லியில் ஆலோசனை நடத்தியது. அதன் பின், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்து மாநிலத் தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிவுக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறும், கீழ்க் கோர்ட்களில் நடைபெறும் வழக்கு விசாரணை களை கண்காணிக்கு மாறும் தெரிவித்திருக்கிறார்.
இதே காலகட்டத்தில்தான், உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், நான்கு மாத காலத்தில் வழக்கினை விசாரித்து முடிக்க வேண்டு மென்று தீர்ப்பளித்த பிறகும், அந்த வழக்கினை அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்கா மல், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி, மேலும் மூன்று மாதங்கள் உச்ச நீதிமன்றத்திடமே கோரிப் பெறுவதும், அந்த மூன்று மாதங்களிலும் விசாரணையை முடிக்காமல், மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்பதும் நடைபெறுகின்றன.
குற்ற வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ளவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் காலத்தில் பாதியை, சம்பந்தப்பட்டவர் சிறையிலேயே விசாரணைக் கைதியாகக் கழித்தி ருந்தால், அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று, நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங் களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்படும் தன்மைக்குரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியி ருக்கும் விசாரணைக் கைதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
விசாரணைக் கைதிகளுக்கெல் லாம் விடிவு ஏற்படும் வகையில் தாமதமாகும் நீதி, தடுக்கப்படும் நீதி என்ற பழமொழியை நன்குணர்ந்து, அமைந்த தீர்ப்பு இது என்பதைச் சுட்டிக்காட்டி, அந்தத் தீர்ப்பை திமுக சார்பில் வரவேற்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT