Published : 26 Feb 2019 08:11 AM
Last Updated : 26 Feb 2019 08:11 AM

3 நகரங்களில் வெயில் சதம்

அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி, தருமபுரியில் 101 டிகிரி, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது:

இந்திய பெருங்கடலில் நில நடுக்கோட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. மேலும் குமரிக் கடல் முதல் மத்திய மகாராஷ்டிரா மாநிலத் தின் தெற்கு பகுதி இடையே, உள் தமிழகம் வழியாக மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது.

இவை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி, தருமபுரியில் 101 டிகிரி, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பநிலை பதிவாகியுள் ளது. மேலும் கோவை மற்றும் நாமக்கல்லில் தலா 98 டிகிரி பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x