Published : 23 Feb 2019 04:30 PM
Last Updated : 23 Feb 2019 04:30 PM
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி கூறுவதை கணக்கில் கொண்டால் ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்கிற கேள்விக்கு, தமிழகத்தின் முக்கிய பிரச்சனை தண்ணீர் தட்டுப்பாடு. அதற்கு தீர்வு கொடுக்கும் கட்சியை மக்கள் ஆய்வு செய்து வாக்களிக்க வேண்டும்". என்று ரஜினி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
“ரஜினி தண்ணீர் கொடுக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். தண்ணீர் கொடுக்கக்கூடிய நிலையில் உள்ள ஒரே கட்சி நாங்கள் தான். அதற்கு என்ன முயற்சிகள் எடுத்துள்ளோம் என்பது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெளிவாக சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
அவசரகால நடவடிக்கையாக நாங்கள் செய்கிற விஷயமாக இருக்கட்டும், நீண்டகால திட்டங்களுக்காக நாங்கள் செய்கிற விஷயங்கள், உதாரணத்திற்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டமாகட்டும் ரொம்ப தெளிவாக நாங்கள் பதிலளித்துள்ளோம்.
ஆகவே ரஜினிகாந்த் அளித்த அறிக்கையின்படி ரஜினியின் ரசிகர்கள் இருந்தால் கண்டிப்பாக அதிமுக கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். அதைவிட வேறு வழியே இல்லை என்று நான் நினைக்கிறேன்.” என அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT