Published : 06 Sep 2014 10:05 AM
Last Updated : 06 Sep 2014 10:05 AM
ஆம்னி பஸ்களின் கட்டண உயர்வு 10-ம் தேதி முதல் அமல் படுத்தப்படும் என்று தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநில தலைவர் அப்சல் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் கொள்கையால் டீசல் விலை கடந்த 18 மாதங்களில் 15 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டீசல் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. சுங்கச்சாவடி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் சுங்க கட்டணம் ரூ.800 உயர்ந்துள்ளது. இன்சூரன்ஸ் கட்டணமும் 10 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதே போல் பஸ் உதிரி பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது சேவை வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏ.சி. அல்லாத சாதாரண பஸ்களில் 10 முதல் 12 சதவீதமும், ஏ.சி. பஸ்களில் 20 சதவீதமும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இந்த புதிய கட்டண முறை வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி ஏ.சி. பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.25 வரையும், சாதாரண பஸ்களுக்கு ரூ.1.60 முதல் 1.75 வரையும் கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT