Published : 02 Feb 2019 02:49 PM
Last Updated : 02 Feb 2019 02:49 PM
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டின் பிரதான கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்க உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு கட்சியும் தயாரித்து அளிப்பது வழக்கம்.
திமுகவுக்கான தேர்தல் அறிக்கை கடந்த 2016-ம் ஆண்டு சிறப்பாக இருந்தது. காரணம் இதற்கான குழு பல்துறை நிபுணர்கள், ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரின் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தயாரித்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் மும்முரத்தில் திமுக உள்ளது. அதற்கான கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி - மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT