Published : 28 Jan 2019 12:50 PM
Last Updated : 28 Jan 2019 12:50 PM

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த கேரள லாரி பறிமுதல்

கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து, பொள் ளாச்சி அருகே கொட்டிச் செல்ல முயன்ற 4 பேரை பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

நேற்று அதிகாலை 3 மணியளவில், மருத்துவக் கழிவு மற்றும் இறைச்சிக் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு, கேரளாவிலிருந்து மீனாட்சிபுரம் வழியாக வந்த சிலர், பொள்ளாச்சி அருகே வக்கம்பாளையத்தில் சாலையோரம் கழிவு மூட்டைகளை கொட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்ரீபதி (30) என்பவர் லாரியின் அருகில் சென்று பார்த்த போது கடுமையான துர்நாற்றம் வீசியது. அவர் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர்.

விசாரணையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் அருள்ராஜ், ஓட்டுநர் தில்லையப்பன், அம்பராம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ராமசாமி, காளிமுத்து ஆகியோர் திருச்சூரில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் 4 பேரையும் ஆனைமலை போலீஸில் ஒப்படைத்தனர்.

கழிவுகள் ஏற்றி வந்த லாரியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதால், அந்த லாரி மீனாட்சிபுரம் சோதனைச்சாவடி எல்லைப்பகுதியில் உள்ள தனியார் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பல ஆண்டுகளாக கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை லாரிகளில் ஏற்றி வந்து தமிழகத்தின் விவசாய நிலங்கள், நீர்நிலைகள், போக்கு வரத்துக் குறைவான கிராம சாலை களில் கொட்டிவிட்டு சென்று விடு கிறார்கள். இதனால் பொதுமக் களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் பரவும் நிலை உள்ளது. எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கழிவுகள் தமிழகத்துக்குள் வருவதை தடுக்க வேண்டும் என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x