Published : 04 Sep 2014 11:10 AM
Last Updated : 04 Sep 2014 11:10 AM

பாரதியின் நினைவு நாளை செப்.12-ல்தான் கடைப்பிடிக்க வேண்டும்: தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை வலியுறுத்தல்

மகாகவி பாரதியின் நினைவுநாளை செப்.12-ம் தேதிதான் கடைப் பிடிக்க வேண்டுமென தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை யின் மாநிலச் செயற்குழு கூட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறையில் அண்மையில் நடை பெற்றது. கூட்டத்துக்கு, பேரவை யின் மாநில தலைவர் பேராசிரியர் துரை.குணசேகரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மகாகவியாக இன்றும் போற்றப்படும் பாரதி யாரின் நினைவு நாளில் குழப்பம் உள்ளது. சென்னை திருவல்லிக் கேணி, டி.பி. கோவில் தெருவில் வாழ்ந்தபோதுதான் பாரதியாருக்கு மரணம் ஏற்பட்டது. இதுகுறித்து செப்.21-ல் சென்னை மாநகராட்சிப் பதிவேட்டில் பாரதி மறைந்த நாள் செப்.12, 1921- என்று பதி வும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகை யில் பாரதியின் பாடல்களை ஆய்வுப் பதிப்பாக ம.ரா.போ.குரு சாமியை பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூலில் 1921 செப்டம்பர் 12, 1.30 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது.

1996-ல் பாரதி வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான சீனி. விசுவநாதன் வெளியிட்ட மகாகவி பாரதி வரலாறு என்ற நூலில், தென்னாட்டுக்கவி சிரேஷ்டர் எனப் போற்றப்பட்ட வரகவி பாரதி 1921 செப்.12-ம் தேதியில் இந்த உலக வாழ்வைத் துறந்து விண் ணவர்க்கு விருந்தாகிவிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வானதி பதிப்பகத்தார் வெளி யிட்ட மகாகவி பாரதியார் கட்டுரை கள் என்னும் பெயரில் வெளியிடப் பட்ட நூலில், 1921 செப்டம்பர் 12-ம் நாள் யாமம் 1.30 மணி அளவில் புகழுடம்பு எய்துதல், அகவை 39 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசும், புதுவை அரசும் செப்.11-ம் தேதியை பாரதி யின் நினைவுநாளாகக் கடைப் பிடிக்கின்றன. இதற்கு காரணம் பாரதி மறைந்தது செப்.11-ம் தேதி பின்னிரவு 1.30 (அதாவது செப்.12-ம் தேதி அதிகாலை 1.30) என்பதுதான். எனவே, தமிழக மற்றும் புதுவை அரசுகள் இந்த ஆண்டிலிருந்து பாரதியாரின் நினைவு நாளை செப்.12-ல் கடைப் பிடிக்க வேண்டும். இதை நடை முறைப்படுத்த ஆவண செய்ய வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x