Published : 12 Sep 2014 11:49 AM
Last Updated : 12 Sep 2014 11:49 AM
இலங்கை கடற்படையினர் 53 தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், பெரிய படகு உட்பட 7 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 23 மீனவர் களை புதன்கிழமை இரவும், ராமேசுவரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை வியாழக்கிழமை அதி காலையும் இலங்கை கடற்படை யினர் கைது செய்தனர். மேலும், பூம்புகார் மீனவர்களின் பெரிய படகையும், ராமேசுவரம் மீனவர் களின் 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பூம்புகார் மீனவர்கள் 23 பேரும் வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட் டனர். அவர்களை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கஜநிதிமாறன் உத்தரவிட்டார். இதையடுத்து, மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தில் மீனவர்கள் கூறியதாவது: கடலில் புதன்கிழமை இரவு 25 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென அவர்களது படகைக் கொண்டு எங்களது 2 சிறிய படகுகளை மோதி மூழ்கடித்தனர். அந்த இரு படகுகளில் இருந்த 2 மீனவர்கள் என்ன ஆயினர் என்று தெரியவில்லை. பெரிய படகில் இருந்த எங்கள் 23 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்படும்போது ரூ. 10 லட்சம் மதிப்பிலான மீன்கள் படகுகளில் இருந்தன என்றனர். கடலில் மூழ்கிய 2 மீனவர்களும் நேற்று கரைக்கு திரும்பினர்.
இதுபோல காரைக்கால் பட்டினச்சேரி மீனவர்கள் 8 பேர் வந்த படகை சுற்றி வளைத்தனர். இதில் 4 பேர் கடலில் குதித்து தப்பிவிட மற்ற 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT