Published : 22 Jan 2019 08:55 AM
Last Updated : 22 Jan 2019 08:55 AM
புளியங்குடி அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த 4 வயது ஆண் யானைக்குட்டியை தீயணைப்புப் படையினர் மற்றும் வனத்துறை யினர் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி, பாதுகாப்பாக மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய வள்ளபள்ளத்து ஓடை என்ற இடத் தில், எலுமிச்சைத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் 4 வயதுள்ள ஆண் யானைக்குட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் தவறி விழுந்தது. இதை, நேற்று காலையில் தோட் டத்துக்குச் சென்றவர்கள் பார்த் துள்ளனர். வனத்துறையினருக் கும், தீயணைப்புப் படையினருக் கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வாசுதேவநல்லூர் தீயணைப்புப் படையினர் காலை 9 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
சுமார் 40 அடி ஆழம் உள்ள கிணற்றில், 15 அடிக்கு தண்ணீர் இருந்தது. தண்ணீரில் நீந்திய படி யானைக்குட்டி கிணற்றுக்குள் சுற்றிச்சுற்றி வந்தது. வனத்துறை யினர் மற்றும் பொதுமக்கள் உதவி யுடன் மீட்புப் பணியை மேற்கொண்ட தீயணைப்புப் படையினர், கிணற்றுக்குள் கயிறு களை வீசினர். யானைக்குட்டி நீந்திக்கொண்டே இருந்ததால் அதன் கால்களுக்கு இடையே கயிறு சிக்கியது. இதையடுத்து, கயிற்றை இறுக்கமாக பிடித்துக் கொண்டனர்.
பள்ளம் தோண்டப்பட்டது
பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் கிணற்றையொட்டி சாய் வாக பள்ளம் தோண்டினர். கிணற்றின் பக்கவாட்டில் இருந்த செங்கல் கட்டுமானத்தை இடித்து, சாய்வாக வழி ஏற்படுத்தினர். பின்னர், கயிற்றை இழுத்து, யானைக்குட்டி மேலே ஏறி வர உதவினர்.
மெதுவாக மேலே ஏறி வந்த யானைக்குட்டி, தன்னை மீட்ட பொக்லைன் இயந்திரத்தை சில முறை முட்டி விளையாடியது. பின்னர், உடலைச் சுற்றிக்கொண்டு இருந்த கயிற்றுடன் அங்கிருந்து ஓட முயற்சித்தது.
எனினும், கயிற்றில் முடிச்சு போடப் படாததால் யானைக்குட்டி அங்கும் இங்கும் ஓடியபோது அதன் உடலைச் சுற்றியிருந்த கயிறு தளர்ந்தது. பின்னர் காட்டை நோக்கி வேகமாக ஓடியது.
இதனைக் காண பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதியில் கூடினர். 3 மணி நேரத்துக்கு மேல் போராடி யானைக்குட்டியை பாதுகாப்பாக மீட்ட வனத்துறை யினர் மற்றும் தீயணைப்புத் துறை யினரை பொதுமக்கள் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT