Published : 07 Jan 2019 10:36 AM
Last Updated : 07 Jan 2019 10:36 AM
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு புதிதாக டிவி சேனல் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவில்பட்டி அருகே குமார புரத்தில் நடந்த சி.கே.டி. பள்ளி ஆண்டு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கொண்டுவரப்படும்.
அங்கன்வாடி பள்ளிகளில் 51 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்ற னர். கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் 1 முதல் 5 மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு 4 புதிய சீருடைகள் வழங்கப்பட உள்ளது.
மாணவர்களை ஒழுக்கசீலர் களாகவும், சிறந்த கல்வியாளர் களாகவும், பெற்றோரை நேசிப் பதற்கும், தேச பக்தி உள்ள வர்களாக உருவாக்குவதற்கும் தனியாக டிவி சேனல் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், 32 மாவட்ட தலைநகரங்களில் உள்ள நூலகங்களில் வரும் ஆண்டு முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஐஏஎஸ் அகாடமி உருவாக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட நூலக அலுவலர்கள் பணி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT