Published : 04 Jan 2019 09:22 AM
Last Updated : 04 Jan 2019 09:22 AM

மேலும் 15 தொழில் நிறுவனங்கள் மூலமாக ரூ.32 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு அனுமதி: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் 15 நிறுவனங் கள் ரூ.32 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கு, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சர வைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் வரும் 23, 24 தேதிகளில் 2-வது உலக முதலீட்டாளர் கள் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்கவும், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கும் பல்வேறு நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் தமிழக அமைச்சரவை கூடி, தமிழகத்தில் 16 நிறுவனங்கள் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கியது. இந்த நிறுவனங்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் மேற்கொள்கின்றன.

இந்நிலையில், முதல்வர் பழனி சாமி தலைமையில் தமிழக அமைச் சரவை நேற்று பகல் 12.15 மணிக்கு கூடியது. இதில், மேலும் 15 நிறுவனங் கள் ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கப் பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், முதலீட்டாளர்கள் மாநாட்டுக் கான பணிகள், வானூர்தி தொழில் கொள்கை தொடர்பாக இதில் விவாதிக் கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:

சென்னையில் உலக முதலீட்டாளர் கள் மாநாடு நடத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதில் பங்கேற்க, தற்போது உள்நாடு, வெளிநாட்டில் இருந்து 250 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரான்ஸ், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், துருக்கி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளோம். அதில் பல நாடுகள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளன. முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் எந்த வகையிலும் தடையாக இல்லை. எனவே, திட்டமிட்டபடி மாநாடு நடத் தப்படும்.

தமிழகத்தில் தொழில் தொடங்க எத்தனை நாடுகளை சேர்ந்த நிறு வனங்கள் கையெழுத்திடும் என்ற விவரங்கள் மாநாட்டில் வெளியிடப் படும். மாநாட்டுக்கு முன்பாக அந்த விவரங்கள் தெரியாது. மாநாட்டால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அபரி மிதமாக இருக்கும்.

பிரேசில் நாட்டின் தொழில் முனைவோர் தற்போது என்னை சந்தித்தனர். படித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்கள் பல சிந்தனைகளுடன் வரும் நிலையில், அவர்களை சிறு, குறு தொழில் முனைவோராக மாற்ற, ‘ஸ்டார்ட் அப்’ பயிற்சியை பிரேசில் தொழில் முனைவோர் தனியார் கல்லூரியுடன் இணைந்து வழங்க உள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x