Published : 01 Jan 2019 10:06 AM
Last Updated : 01 Jan 2019 10:06 AM

மதுரை காமராசர் பல்கலைகழக புதிய துணைவேந்தர் எம்.கிருஷ்ணன்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்

பாரதிதாசன் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை தலைவராக இருந்த எம்.கிருஷ்ணனை மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை கடந்த 2017 மே மாதம் நியமிக்கப்பட்டார். அவர் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாகவும், நியமனத்தில் தவறு நடந்ததாகவும் புகார் எழுந்தது. அவரை பதவிநீக்கம் செய்யக் கோரி வழக்கு தொடரப் பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது நியமனத்தை உச்ச நீதி மன்றம் சமீபத்தில் ரத்து செய்தது.

இதையடுத்து, துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. தேர்வுக் குழுவினர் இறுதியாக 3 பேரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்தனர்.

அதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறை தலைவராக இருந்த எம்.கிருஷ் ணனை மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆளுநரை புதிய துணைவேந்தர் கிருஷ்ணன் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை தலைவர் மட்டுமின்றி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக கிருஷ்ணன் பணி யாற்றியுள்ளார். லண்டனில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சிக் குழு, இந்தியாவின் அறிவியல், சுற்றுச்சூழலுக்கான சங்கம் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

கடந்த 28 ஆண்டுகளாக பல் வேறு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

வெளிநாட்டு கருத்தரங்குகளில் 128 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அவரது 60-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) இதழ்களில் வெளியாகியுள்ளன. நுண் உயிரியல் துறையில் 2 நூல்களையும் எழுதியுள்ளார். பதவி ஏற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பணியாற்று வார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x