Last Updated : 25 Jan, 2019 02:30 PM

 

Published : 25 Jan 2019 02:30 PM
Last Updated : 25 Jan 2019 02:30 PM

குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சி: நாராயணசாமி குற்றச்சாட்டு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சிப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்வர் நாராயணசாமி இன்று (வெள்ளிக்கிழமை) தனது நெல்லித்தோப்பு தொகுதியில், செவிலியர் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு குறித்தான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

"தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளே தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பின்பற்றுகின்றன. காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டுமென்பதில் தெளிவாக உள்ளது. 

மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பாரதிய ஜனதா கட்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறது" என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x