Published : 23 Jan 2019 10:21 AM
Last Updated : 23 Jan 2019 10:21 AM

விபத்து காய சிகிச்சை மையங்களை நவீனமயமாக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திருச்சி விமான நிலையத் தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்தாண்டு சட்டப்பேரவையில், விபத்து காய சிகிச்சை கொள்கை உருவாக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அடிக்கடி விபத்து காய சிகிச்சைக்கு வரும் 75 இடங்கள் கண்டறியப்பட்டு, தாய் திட்டத்தின் கீழ் ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விபத்து காய சிகிச்சை மையங்கள் தொடங்கப் பட்டன.

இதையடுத்து, தமிழ்நாட்டில் ஏற் கெனவே பதிவான விபத்து இறப்பு எண்ணிக்கையில் 20 சதவீதம் குறைந்தது. சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் விபத்து இறப்பு விகிதம் 8.6-ல் இருந்து 2.8 ஆக குறைந்தது. இந்த சாதனைக்காக சுதந்திர தினத்தன்று மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு முதல்வர் விருது வழங்கினார்.

இதையடுத்து, நிகழாண்டு விபத்து காய சிகிச்சை மையங்களை நவீன வகையில் மேம்படுத்த ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்படு கிறது. சாலைகள் மேம்பாடு, போக்குவரத்து சீரமைப்பு, சுகாதாரத் துறையின் தாய் திட்டம் ஆகியவற்றின் மூலம் விபத்து இறப்பு விகிதத்தை நாம் குறைத்துள்ள நிலையில், இந்த நிதி முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது மேலும் குறையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x