Published : 12 Jan 2019 08:13 PM
Last Updated : 12 Jan 2019 08:13 PM

நீதிமன்ற தடையை மீறி பேனர் வைக்க அனுமதி: தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு

நீதிமன்ற தடையை  மீறி பேனர் வைக்க அனுமதித்ததாக தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விதிமீறல் பேனர்கள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு,  அரசியல் கட்சியினர் பேனர் வைக்க  தடை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை மீறி, சென்னை, கோவை, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற இடங்களில் பேனர்கள் வைக்கப்படுவதாக கூறி, தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாக துறை செயலாளர் ஹர்மிந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் ஹர்மிந்தர் சிங் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x